தமிழ் புத்தாண்டே வருக !

பூவிழி திறந்து வந்ததம்மா
இந்த புதிய தமிழ் ஆண்டு !

புன்னகை சிந்தி வந்ததம்மா
இந்த "பார்த்திப" தமிழ் ஆண்டு !

புலம்பிக்கொண்டே போனதம்மா
பொல்லாத் தமிழ் ஆண்டு !

இன்பம் தரவே வந்தம்மா
இந்தத் தமிழ் ஆண்டு !

இன்னல் தீர்க்கவே பிறந்ததம்மா
இந்த இனியத் தமிழ் ஆண்டு !

செந்தமிழை என்றும் செம்மொழியாக்கி சிறந்திடும்
இந்தத் தமிழ் ஆண்டு !

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

1 விமர்சனம்:

At 12:04 PM, Blogger முத்துகுமரன் said...

நல்ல கவிதை ஐயா....

ஆனாலும் ஒரு சந்தேகம். சித்திரை எப்படி தமிழ்புத்தாண்டின் முதல்மாதமாகும். தைதானே - மேலும் பார்த்திபத்ததை எப்படி தமிழ் புத்தாண்டாக எடுத்துக் கொள்வது...

 

Post a Comment

<< முகப்பு